search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து முன்னணி சார்பில் 5004 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    X

    இந்து முன்னணி சார்பில் 5004 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

    • மணவாளக்குறிச்சி சிலைகள் சின்னவிளை கடலில் கரைக்கப்படுகிறது.
    • நாகர்கோவில் மாநகர் சிலைகள் சங்குத்துறை கடலில் கரைக்கப்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட இந்து முன்னணி பொதுச்செய லாளர் ஆர்.கே.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவானது வருகிற 31-ந்தேதி அன்று மாவட்டம் முழுவதும் 5004 விநாயகர் சிலைகள் கோவில்கள். பொது இடங்கள், வீடுகளில் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர், பூஜையில் வைக்கப்பட்ட சிலைகள் கடல், ஆறு, அருவி உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

    அதன்படி மணவாளக்கு றிச்சி பேரூராட்சிக்குட்பட்ட சிலைகள் வருகிற 3-ந்தேதி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து காலை 8.30 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 5.30 மணிக்கு சின்னவிளை கடலில் கரைக் கப்படுகிறது.

    நாகர்கோவில் மாநகர், ராஜாக்கமங்கலம் ஒன்றி யத்தில் வைக்கப்படும் சிலைகள் வருகிற 4-ந்தேதி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து மதியம் 2.30 மணிக்கு ஊர்வலமாக எடுத் துச் செல்லப்பட்டு சங்குத் துறை கடலில் கரைப்படுகிறது.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றியத் தில் வைக்கப்படும் சிலை கள் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் முன்பு இருந்து பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடலில் கரைக்கப்படும்.

    தோவாளை ஒன்றியத்தில் தோவாளை முருகன் கோவில் அடிவாரத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு ஞாலம் பள்ளி கொண்டான் அணையில் கரைக்கப்படுகிறது.

    குருந்தன்கோடு ஒன்றி யம், குளச்சல்நகர் பகுதி யில் வைக்கப்படும் சிலை கள் திங்கள்நகர் ராதா கிருஷ்ணன் கோவில் முன்பு இருந்தும், தக்கலை ஒன்றியம், பத்மநாபபுரம் நகர் பகுதிகளில் உள்ள சிலைகள் மதியம் 12 மணிக்குவைகுண்ட புரம் ராமர் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துசென்று மண்டைக்காடு கடலில் கரைக்கப்படுகிறது.

    திருவட்டார் ஒன்றி யத்தில் செருப்பாலூர் முத்தாரம்மன் கோவிலில் இருந்து காலை 10 மணிக்கு சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று திற்பரப்பு அருவியிலும், கிள்ளியூர் ஒன்றியத்தில் வைக்கப்படும் சிலைகள் கருங்கல் கூனாலு மூடுதர்ம சாஸ்தா கோவிலில் இருந்து காலை 10 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல் லப்பட்டு மிடாலம் கடலில் கரைக்கப்படுகிறது

    மேல்புறம் ஒன்றியத்தில் அளப்பன்கோடு ஈஸ்வரன் கால பூதத்தான் கோவிலில் இருந்து காலை 10 மணிக்கு ஊர்வலமாக சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும், முன்சிறை ஒன்றியம், கொல்லங்கோடு நகர் பகுதி சிலைகள் மதியம் 2 மணிக்கு அஞ் சுகண்ணுகலுங்கு மாடன் தம்புரான் இசக்கி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வல மாகஎடுத்துச் செல்லப்பட்டு தேங்காப்பட்டணம் கடலி லும், குழித்துறை நகர் பகுதி யில் வைக்கப்படும் சிலைகள் காலை 10 மணிக்கு பம்மம் பகுதியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×