என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செட்டிவிளை முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா
- நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
- ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
நாகர்கோவில் :
சாமிதோப்பு அருகே உள்ள செட்டிவிளை ஊர் தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
விழாவில் நாளை அதிகாலை 5 மணிக்கு கடல் தீர்த்தம் கொண்டு வருதல், திருநடை திறப்பு, மாலை 6 மணிக்கு நையாண்டிமேளம், 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9.30 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமிக்கு பூஜை, 2.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜை நடைபெறுகிறது.
26-ந்தேதி காலை 8 மணிக்கு நையாண்டி மேளம், 8.30 மணிக்கு சிங்காரி மேளம், 9.30 மணிக்கு வில்லிசை, 10.30 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், பகல் 12 மணிக்கு வெள்ளை மாரியம்மன், மஞ்சள் மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.
மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து, 2.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 9.30 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு உச்சிமாகாளி அம்மனுக்கு பூப்படைப்பு, அலங்கார பூஜை, அதிகாலை 2 மணிக்கு செங்கிடாகாரசாமி, வழி வேட்டைக்காரசாமிக்கு பூஜை, அதிகாலை 5 மணிக்கு பிரம்ம சக்தி, சுடலை மாடசாமிக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்