search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ்
    X

    குமரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ்

    • போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரன் பிரசாத் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
    • தங்களது புலன்விசாரணயில் இருக்கும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை விரைந்து முடித்த போலீஸ் அதிகாரிகள்,

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரன் பிரசாத் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

    மேலும் சென்ற மாதத்தில் சிறப்பாக பணியாற்றி பல்வேறு திருட்டு வழக்குகளில் குற்றவா ளிகளை கைது செய்து திருட்டு பொருள்களை மீட்ட தனிப்படையினர் மற்றும் நகை பறிப்பு வழக்குகளில் குற்றவாளிகளை பிடித்து திருட்டு பொருள்களை மீட்ட தனிப்படையினர் தங்களது புலன்விசாரணயில் இருக்கும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை விரைந்து முடித்த போலீஸ் அதிகாரிகள்,

    கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்களை விற்ற குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினர்,நீதிமன்ற நடைமுறைகளின் சிறப்பாக பணியாற்றிய போலீசார், குற்றவாளிகளை கைது செய்ய அதிகாரிகளுக்கு உதவிப்புரிந்த தனிபிரிவு போலீசார் ஆகியோருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    Next Story
    ×