search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவிதாங்கோட்டில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
    X

    திருவிதாங்கோட்டில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

    • 2 ஆயிரம் பேர் பங்கேற்பு
    • தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டி தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டா டப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படு கிறது.

    இப்பண்டிகையை ஒட்டி முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்க ளும், பெண்களும் அணிவ குத்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று சுன்னத்துல் ஜமாத், தல்ஹீத் பிரிவினர் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாக இஸ்லாமியர்கள் குடும்பத்தினரோடு இன்று காலையில் ரமலான் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையி லான 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி மீராசா ஆண்டவர் பள்ளியில் இன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அப்பகுதியைச் சார்ந்த ஆயி ரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

    தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டி தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.

    Next Story
    ×