என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆஸ்பத்திரி காவலாளி மீது தாக்குதல்
- மது போதையில் சென்ற சம்மந்தபட்ட நபர்கள் ஆஸ்பத்திரி நர்சுகளிடம் தகராறு செய்துள்ளனர்
- காயமடைந்த மனோகரன் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே வெள்ளையம் பலம் பகுதியில் செயல்படும் தனியார் ஆஸ்பத்திரிக்கு காப்புக்காடு பகுதி மங்காட்டான்விளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு தலையில் காயம் பட்டதாக கூறி சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனர். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த அஜீத், அபிஷ் ஆகியோரும் சென்றுள்ளனர். மது போதையில் சென்ற சம்மந்தபட்ட நபர்கள் ஆஸ்பத்திரி நர்சுகளிடம் தகராறு செய்துள்ளனர். இதை ஆஸ்பத்திரி காவலாளி மனோகரன் (வயது 55) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அஜித், கண்ணன், அபிஷ் ஆகியோர் காவலாளி மனோகரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த மனோகரன் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மருத்துவமனை உரிமையாளர் ஆல்வின்லால் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்