search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆஸ்பத்திரி காவலாளி மீது தாக்குதல்
    X

    ஆஸ்பத்திரி காவலாளி மீது தாக்குதல்

    • மது போதையில் சென்ற சம்மந்தபட்ட நபர்கள் ஆஸ்பத்திரி நர்சுகளிடம் தகராறு செய்துள்ளனர்
    • காயமடைந்த மனோகரன் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே வெள்ளையம் பலம் பகுதியில் செயல்படும் தனியார் ஆஸ்பத்திரிக்கு காப்புக்காடு பகுதி மங்காட்டான்விளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு தலையில் காயம் பட்டதாக கூறி சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனர். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த அஜீத், அபிஷ் ஆகியோரும் சென்றுள்ளனர். மது போதையில் சென்ற சம்மந்தபட்ட நபர்கள் ஆஸ்பத்திரி நர்சுகளிடம் தகராறு செய்துள்ளனர். இதை ஆஸ்பத்திரி காவலாளி மனோகரன் (வயது 55) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அஜித், கண்ணன், அபிஷ் ஆகியோர் காவலாளி மனோகரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த மனோகரன் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மருத்துவமனை உரிமையாளர் ஆல்வின்லால் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×