search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில்  பக்தர்கள் காவடி ஊர்வலம்
    X

    கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காவடி ஊர்வலம்

    • பெண்கள் பால்குடம் எடுத்து பவனி
    • சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்தது

    கன்னியாகுமரிூ

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்தருளியுள்ள சன்னதி உள்ளது. இங்கு வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

    பால்குடம்

    அதேபோல பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். முன்னதாக இந்த கோவிலில் உள்ள சாஸ்தா சன்னதியில் வைத்து காவடி கட்டு மற்றும் குடத்தில் பால் நிரப்பும் வைபவம் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து கோவிலை சுற்றி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

    அதன்பிறகு சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் அலங்கார தீபாராதனையும் அதைத் தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் 1 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×