search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே விபத்தில் மேலும் ஒருவர் பரிதாப சாவு
    X

    திருவட்டார் அருகே விபத்தில் மேலும் ஒருவர் பரிதாப சாவு

    • எதிர்பாராத விதமாக அங்குள்ள மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது
    • திருவட்டார் போலீஸ் இன்ஸ் பெக்டர் ஷேக்அப்துல் காதர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே உள்ள பாலத்தோப்பு விளை தோட்டவரம் பகுதியை சேர்ந்தவர் செர்லின் (வயது 28), தொழிலாளி.

    இவரது நண்பர் விஜயன் (31). இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று நண்பர்கள் 2 பேரும் வேர்கிளம்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    ஆற்றூர் நோக்கி சென்ற அவர்கள், வியனூர் மின்விநி யோகம் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செர்லின் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக விஜயன் ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி விஜயன் இறந்துவிட்டார்.

    விபத்து குறித்து திருவட்டார் போலீஸ் இன்ஸ் பெக்டர் ஷேக்அப்துல் காதர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×