என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவட்டார் அருகே தூக்கு போட்டு வியாபாரி தற்கொலை
- மனைவியின் சுடிதார் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் ரிங்கிள் காணப்பட்டார்.
- ரிங்கிளுக்கு மது அருந்தும் போது மனநிலை பாதிப்பு ஏற்படுமாம்
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் முளங்கோட்டு விளையைச் சேர்ந்தவர் ரிங்கிள் வயது (வயது 40). இவருக்கு மேரி ஜின்சிரா என்ற மனைவியும் 3 மற்றும் 6 வயதில் 2 மகள்களும் உள்ளனர்.
ரிங்கிள் அந்த பகுதியில் சொந்தமாக காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று ரிங்கிள் வீட்டின் அறையிலும், மனைவி ஹாலிலும் படுத்துள்ளனர். இந்த நிலையில் அதிகாலையில் அறையில் மின்விசிறியில் மனைவியின் சுடிதார் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் ரிங்கிள் காணப்பட்டார்.
இதனை கண்ட மேரி ஜின்சிரா அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தவர்கள் உதவியுடன் கணவர் ரிங்கிளை மீட்டு ஆசாரிப்பள்ளம அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ரிங்கிள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திருவட்டார் போலீசில், மேரி ஜின்சிரா புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் ரிங்கிளுக்கு மது அருந்தும் போது மனநிலை பாதிப்பு ஏற்படுமாம். நேற்று முன் தினம் காலையில் மனநிலை பாதிப்பு ஏற்பட்டு வீட்டினுள் சுற்றிக் கொண்டி ருந்தார். மாலையில் அவரை அருகில் உள்ள சர்ச்சுக்கு அழைத்துச் சென்று ஜெபம் செய்துள்ளனர். பின்னர் மனைவியுடன் நாகர்கோவில் பால்பண்ணை அருகில் உள்ள மனநல மருத்துவ னைக்குச் அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர் இல்லாததால் ஆஸ்பத்திரியில் உள்ளவர்கள் மறுநாள் அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள். இந்த நிலையில் தான் அவர் தற்கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்