search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
    X

    குலசேகரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

    • பால்டெக்னிக் படித்துவிட்டு டெம்போ ஒட்டி வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
    • குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமாி :

    குலசேகரம் அருகே மாமூடு பகுதியை சேர்ந்த ஜெஸ்டின்ராஜ் என்பவரது மகன் கிறிஸ்டின் பால் அஜி. (வயது 19).

    இவர் பால்டெக்னிக் படித்துவிட்டு டெம்போ ஒட்டி வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    தினமும் வேலை முடிந்து வரும் போது மது அருந்தி வரும் அவர், நேற்று இரவும் மது அருந்தி வந்தார். உடனே பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் கிறிஸ்டின் பால் அஜி எழுந்திருக்கவில்லை.

    அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடைந்தார். உடனே அவரை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது இறந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×