search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சலில் முன் விரோதத்தில் மீனவருக்கு அரிவாள் வெட்டு
    X

    குளச்சலில் முன் விரோதத்தில் மீனவருக்கு அரிவாள் வெட்டு

    • ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
    • குளச்சல் போலீசார் சதீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    குளச்சல் சாஸ்தான்கரை யில் ஒரு அபார்ட்மெண்ட் டில் வசித்து வருபவர் விஜயன் (வயது 34). கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் மறவன்குடியிருப்பை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஸ் என்பவரும் வசித்து வருகிறார். குடும்ப தகராறில் விஜயன் மீது சதீசுக்கு முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சதீஸ் செல்போன் மூலம் விஜயனை வீட்டிற்கு அழைத்தார். அங்கு சென்ற விஜயனை சதீஸ் அரிவாளால் வெட்டினார். இதில் விஜயனுக்கு இடது முழங்கை மற்றும் இடது கை பெருவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாய மடைந்த விஜயன் குளச்சலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் சதீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×