என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குளச்சலில் முன் விரோதத்தில் மீனவருக்கு அரிவாள் வெட்டு
Byமாலை மலர்25 Jun 2023 6:33 AM GMT
- ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
- குளச்சல் போலீசார் சதீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
குளச்சல் சாஸ்தான்கரை யில் ஒரு அபார்ட்மெண்ட் டில் வசித்து வருபவர் விஜயன் (வயது 34). கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் மறவன்குடியிருப்பை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஸ் என்பவரும் வசித்து வருகிறார். குடும்ப தகராறில் விஜயன் மீது சதீசுக்கு முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சதீஸ் செல்போன் மூலம் விஜயனை வீட்டிற்கு அழைத்தார். அங்கு சென்ற விஜயனை சதீஸ் அரிவாளால் வெட்டினார். இதில் விஜயனுக்கு இடது முழங்கை மற்றும் இடது கை பெருவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாய மடைந்த விஜயன் குளச்சலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் சதீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X