search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
    X

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

    • பொதுமக்கள் திரண்டு பார்த்தனர்
    • உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட அண்ணா பஸ் நிலையத்தில் அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்து றையின் சார்பில் புகைப் படக் கண்காட்சி நடைபெற்றது.

    கிராமப்புற மக்களுக்கான அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள், முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டது,

    உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

    பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த இந்த கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற்றனர்.

    Next Story
    ×