search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளையில் 6 ஆடுகள் மர்மச்சாவு
    X

    தோவாளையில் 6 ஆடுகள் மர்மச்சாவு

    • உடல்களில் காயங்கள் இருப்பதாக புகார்
    • ஆரல்வாய்மொழி போலீசாருக்கும் பூதப்பாண்டி வனத்துறையினருக்கும் தகவல்

    கன்னியாகுமரி:

    தோவாளை வில்லிசேரி குளத்தின் அருகே, நாகர்கோவிலைச் சேர்ந்த நல்லதம்பி என்பவருக்கு தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தில் அய்யாப்பிள்ளை என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். சுமார் 22 ஆடுகளை அவர் பராமரித்து வருகிறார்.

    தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் அய்யாபிள்ளை, மாலையில் அவற்றை தோட்டத்தில் அடைத்து விடுவார். நேற்று மாலையும் அவர் ஆடுகளை அடைத்து விட்டு, தனது வீட்டுக்குச் சென்று விட்டார்.

    இன்று காலை அவர் தோட்டத்திற்கு வந்தபோது, 6 ஆடுகள் மர்மமாக இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இறந்து கிடந்த ஆடுகளின் உடல்களில் காயங்கள் காணப்பட்டன. ஏதோ மிருகம் கடித்தது போன்று அந்தக் காயங்கள் இருப்பதாக அய்யாப்பிள்ளை தெரிவித்தார்.

    இதுபற்றி ஆரல்வாய் மொழி போலீசாருக்கும் பூதப்பாண்டி வனத்துறை யினருக்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×