என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தோவாளையில் 6 ஆடுகள் மர்மச்சாவு
- உடல்களில் காயங்கள் இருப்பதாக புகார்
- ஆரல்வாய்மொழி போலீசாருக்கும் பூதப்பாண்டி வனத்துறையினருக்கும் தகவல்
கன்னியாகுமரி:
தோவாளை வில்லிசேரி குளத்தின் அருகே, நாகர்கோவிலைச் சேர்ந்த நல்லதம்பி என்பவருக்கு தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் அய்யாப்பிள்ளை என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். சுமார் 22 ஆடுகளை அவர் பராமரித்து வருகிறார்.
தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் அய்யாபிள்ளை, மாலையில் அவற்றை தோட்டத்தில் அடைத்து விடுவார். நேற்று மாலையும் அவர் ஆடுகளை அடைத்து விட்டு, தனது வீட்டுக்குச் சென்று விட்டார்.
இன்று காலை அவர் தோட்டத்திற்கு வந்தபோது, 6 ஆடுகள் மர்மமாக இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இறந்து கிடந்த ஆடுகளின் உடல்களில் காயங்கள் காணப்பட்டன. ஏதோ மிருகம் கடித்தது போன்று அந்தக் காயங்கள் இருப்பதாக அய்யாப்பிள்ளை தெரிவித்தார்.
இதுபற்றி ஆரல்வாய் மொழி போலீசாருக்கும் பூதப்பாண்டி வனத்துறை யினருக்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்