என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் 56.62 சதவீத வாக்குப்பதிவு
- வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
- 4 இடங்களில் வாக்கு எண்ணிக்கை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.
ராஜாக்கமங்கலம் ஊராட்சி 10-வது வார்டு, குருந்தன்கோடு ஊராட்சி 7-வது வார்டு, மருதூர் குறிச்சி கிராம ஊராட்சி 5-வது வார்டு, கண்ணனூர் கிராம ஊராட்சி 4-வது வார்டு, காட்டாதுறை கிராம ஊராட்சி 5-வது வார்டுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி மாலை வரை நடந்தது. 5 பதவிகளுக்கும் 56.62 சதவீத பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த கட்சி முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. ராஜாக்கமங்கலம் யூனியன் கவுன்சிலர் பதவிக்கு பதிவான வாக்குப்பெட்டி கள் ராஜாக்க மங்கலம் யூனியன் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
பூட்டி சீல் வைக்கப்பட்ட மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் 7-வது வார்டில் பதிவான வாக்குப் பெட்டிகள் குருந்தன்கோடு யூனியன் அலுவலகத்திலும், தக்கலை ஒன்றியத்திற்குட்பட்ட மருதூர் குறிச்சி கிராம ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பெட்டிகள் தக்கலை யூனியன் அலுவலகத்திலும் பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளது.
திருவட்டார் ஒன்றி யத்துக்குட்பட்ட கண்ணனூர் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பதிவான வாக்குப் பெட்டிகளும் காட்டாத்துறை கிராம ஊராட்சி 5-வது வார்டில் பதிவான வாக்குப் பெட்டிகளும் திருவட்டார் யூனியன் அலுவலகத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு சி.சி.டி.வி. கேமராவும் பொருத் தப்பட்டு கண் காணிப்பு பணி மேற்கொள் ளப்பட்டு வருகிறது. தேர்த லில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வருகிற 12-ந்தேதி நடக்கிறது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் முடிவுகள் 9 மணிக்கு முன்னதாக தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்