search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சலில் பதுக்கி வைத்த 400 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
    X

    குளச்சலில் பதுக்கி வைத்த 400 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    • குளச்சல் பீச் சந்திப்பில் ஒரு வீட்டில் ரேசன் அரிசி கடத்தி செல்வதற்கு பதுக்கி வைத்திருப்பதாக தகவல்
    • சிறு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 400 கிலோ ரேசன் அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட ரேசன் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

    அப்போது குளச்சல் பீச் சந்திப்பில் ஒரு வீட்டில் ரேசன் அரிசி கடத்தி செல்வதற்கு பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அங்கு சிறு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 400 கிலோ ரேசன் அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

    Next Story
    ×