search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே அ.தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் மீது தாக்குதல்
    X

    பீட்டர் 

    களியக்காவிளை அருகே அ.தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் மீது தாக்குதல்

    • ரவுடி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
    • களியக்காவிளை போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள பாலவிளை பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவர் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளராக உள்ளார்.

    பல்வேறு சமூக பணி களிலும் பீட்டர் ஈடுபட்டு வந்தார். மேலும் குழித்துறை பகுதியில் குற்றச் செயல்களையும் இவர் கண்டித்துள்ளார். இதனால் சிலருடன் முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது.

    சம்பவத்தன்று பீட்டர் குழித்துறையில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த பீட்டரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல்சிகிச்சை க்காக அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் பீட்டரை தாக்கியது பால விளை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ராஜ புத்திரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சசி, கில்பர்ட் என தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ராஜ புத்திரன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.சமீபத்தில் வழக்கு ஒன்றில் 10 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்ற அவன், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளான்.

    Next Story
    ×