என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இரணியல் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
- 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்
- போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஓழிக்க நடவடிக்கை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஓழிக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு போதைப் பொருள் விற்பனையை தடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இரணி யல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுந்தர்மூர்த்தி மற்றும் போலீசார் நேற்று காலை ஆலங்கோடு புளிய மூடு சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.
அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர். இதில் அந்தப் பைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்க ளிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் ஆலங்கோடு அபினேஷ் (வயது 26), கீழ ஆப்பிக்கோடு ஆன்றோ பிரின்ஸ் (21) என தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்