என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கண்ணனூர் மாரியம்மன் ஆடித்திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து வழிபாடு
- தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் ஆடிபெருவிழா தொடங்கியது.
- முதல்நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் 1008 தீர்த்தக்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் ஆடிபெருவிழா தொடங்கியது. முதல்நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் 1008 தீர்த்தக்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்மனுக்கு அபிஷே கம் செய்தனர். இரவு மின்விளக்குகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட மகாமேருவில் சிம்மவாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.
2-ம் நாள் நிகழ்ச்சி யாக இன்று மாலை ஸ்ரீ முத்துக்கு மாரசாமி படைக்கோலம் நடை பெற்றது. நாளை 3-ம் நாள் நிகழ்ச்சியாக அதிகாலை முதல் பக்தர்களின் பூ மிதித்தல், மாவிளக்கு ஊர்வலமும் மாலை அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் அம்மன் திருவீதி உலா, அலகு குத்துதல் ஆகியவை நடக்கின்றன.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பூந்தேர் ஊர்வலமும் 12-ந்தேதி( வெள்ளிக்கிழமை) மாலை வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் திருமஞ்சள் நீராட்டு வீதிஉலா நடைபெறும்.
5 நாட்களும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், பட்டி மன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் . விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டளை தாரர்கள் பூவேல் நாட்டு நாட்டண்மைக்காரர் இனியன், நகராட்சி தலைவர் குப்பு என்கிற குணசேகரன், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா, செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர் .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்