search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் நித்யகல்யாணி அம்பாள்-வில்வ வனநாதர் கோவில் தேரோட்டம் - 2-ந்தேதி நடக்கிறது
    X

    கடையம் நித்யகல்யாணி அம்பாள்-வில்வ வனநாதர் கோவில் தேரோட்டம் - 2-ந்தேதி நடக்கிறது

    • சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவில் கடந்த 26-ந் தேதி காலையில் ஏக சிம்மாசன அபிஷேகம், பூத சிம்ம வாகனத்தில் எழுந்தருளல் நடைபெற்றது.

    கடையம்:

    கடையம் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வ வனநாதர் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்தாண்டு சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.

    விழாவில் கடந்த 26-ந் தேதி காலையில் ஏக சிம்மாசன அபிஷேகம், பூத சிம்ம வாகனத்தில் எழுந்தருளல் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து 27-ந் தேதி காலை ஏக சிம்மாசனம், பின்னர் அபிஷேகம் , திருத்தேர் கால் நாட்டுதல் நடந்தது. 5-ம் திருநாளான நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்திர வாகனங்களில் எழுந்தருளல், சுவாமி- அம்பாள் தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் இன்று காலை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இரவில் யானை அன்ன வாகனங்களில் எழுந்தருளல் நடை பெறுகிறது.

    விழாவில் வருகிற 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.தொடர்ந்து அதிகாலை அபிஷேகம், தீபாராதனை, சுவாமி ரதத்திற்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. பின்னர் சுவாமி-அம்பாள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.

    இதையடுத்து மாலையில் திருத்தேர் வலம் வருதல் நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டாரப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.விழாவானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு

    மண்டகப்படிதாரர்களால் நடத்தப்படுகிறது.

    Next Story
    ×