search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வாலிபரிடம் நகை-செல்போன் பறிப்பு
    X

    கோவையில் வாலிபரிடம் நகை-செல்போன் பறிப்பு

    • 3 பேர் கும்பல் அரவிந்த் மற்றும் அவரது நண்பர்களிடம் பணம் கேட்டு மிரட்டினர்
    • போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை பறித்து சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    கோவை :

    கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் அரவிந்த் (23). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவு தனது நண்பர்களுடன் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு ரெயில்வே பாலம் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் அரவிந்த் மற்றும் அவரது நண்பர்களிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர்கள் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து அரவிந்தின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க நகை மற்றும் நண்பர்களிடம் இருந்த 3 செல்போன்களை பறித்து ெகாண்டு தப்பியோடினர்.

    இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை பறித்து சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×