search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.

    அரசு அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 20 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் பாரதி நகரை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 38). இவர் குடவாசல் தாலுக்கா ஓகை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சி அடுத்த மண்ணச்சநல்லூர் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1லட்சம் ரொக்க பணம் மற்றும் 20 பவுன் தங்கநகைகள் கொள்ளையடிக்கபட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து முத்துக்குமரன் நாச்சியார் கோவில் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×