search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்து வட்டி கேட்டு மிரட்டல் : நிதி நிறுவன உரிமையாளர் கைது
    X

    கந்து வட்டி கேட்டு மிரட்டல் : நிதி நிறுவன உரிமையாளர் கைது

    சேலம் நெத்திமேட்டில் கந்து வட்டி கேட்டு மிரட்டல் நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் நெத்திமேடு கே.பி. கரட்டை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 45). ஜவ்வரிசி வியாபாரியான இவர் நேற்று அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    நான் தொழிலை மேம்படுத்த நெத்திமேட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தை அணுகினேன். அப்போது நிதி நிறுவன உரிமையாளரான ராஜவேல் பாபுவிடம் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.2 லட்சம் ரூபாயை கந்து வட்டிக்கு வாங்கினேன், மாதம் 26 ஆயிரம் வீதம் 10 தவணைகளில் பணத்தை திருப்பி செலுத்தினேன்.

    பணத்தை பெற்ற அவர் மீண்டும் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு வந்தார். தர மறுத்த நிலையில் கடந்த 9-ந் தேதி மிரட்ட ல் விடுத்தார். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் கூறி இருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக ராஜவேல்பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×