search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதித்தனார் கல்லூரியில் ஆரோக்கிய மன்ற தொடக்கவிழா
    X

    ஆதித்தனார் கல்லூரியில் ஆரோக்கிய மன்ற தொடக்கவிழா

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆரோக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
    • திருச்செந்தூர் தொகுதி வளமைய கல்வியாளர் ஜெயாஹெலன் , ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆரோக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தொடங்கி வைத்தார். ஆரோக்கிய மன்ற தலைவர் கவிதா வரவேற்று பேசினார். இவ்விழாவில் திருசெந்தூர் தொகுதி வளமைய கல்வியாளர் ஜெயாஹெலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி பேசினார். மேலும், தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், சிறந்த மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பெற்று வாழ்வில் நோயற்ற வாழ்வை எதிர்கொள்வார்கள் என அவர் தெரிவித்தார். ஆரோக்கிய மன்ற செயல் உறுப்பினர் தீபாராணி நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மன்ற மாணவச் செயலாளர் சுபாஷ், வேதியியல் துறை பேராசிரியர்கள் ஜெஸிந்த்மிஸ்பா, அபுல்கலாம் ஆஷாத், கோடிஸ்பதி, ராம்தாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×