search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஞ்சப்பள்ளியில்  9-ம் வகுப்பு மாணவன் மாயம்
    X

    பஞ்சப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவன் மாயம்

    • மாணவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பஞ்சப்பள்ளி யில் காரிமங்கலத்தை அடுத்த சொன்னாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சபரி (14).

    இவர் பஞ்சப் பள்ளியில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி அதே பகுதியில் உள்ள பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 8-ம் தேதி பள்ளிக்குச் சென்ற சபரி இல்லம் திரும்பவில்லை. தகவல் அறிந்த இல்ல கண்காணிப்பாளர் சுந்தர மூர்த்தி மாணவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் பஞ்சப்பள்ளி போலீசாரிடம் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×