search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரண்டஅள்ளி பேரூராட்சியில்  சுதந்திர தின அமுத பெருவிழா
    X

    மாரண்டஅள்ளி பேரூராட்சியில் சுதந்திர தின அமுத பெருவிழா

    • மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 75-வது சுதந்திர தின அமுத விழா கொண்டாடப்பட்டது.
    • வீடுகளுக்கு தேசியக்கொடி கொடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 75-வது சுதந்திர தின அமுத விழா கொண்டாடப்பட்டது.

    சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் 3 நாட்கள் தேசிய கொடி ஏற்றுவதற்காக மாரண்டஅள்ளி பேரூராட்சி சார்பில் முக்கிய வீதிகளில் சென்று கடைகள் மற்றும் வீடுகளுக்கு தேசியக்கொடி கொடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் கார்த்திகா, பன்னீர்செல்வம் மற்றும் மாரண்டஅள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரை கனி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் வீடுகளுக்கும், கடைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய கொடியை வழங்கினர்.

    Next Story
    ×