search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும்
    X

    பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும்

    • பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் படமுடிபாளையம் சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வருகிறது.
    • வாகனம் குறித்த அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது,

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டாட்சி யர் அலுவலகத்தின் முன்பு அடிக்கடி ஏற்படும் வாகன விபத்து. கேமரா அமைத்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் படமுடிபாளையம் சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வருகிறது. வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக மாணவ ,மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாக னங்களில் சிக்கி அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.பரமத்தி வேலூர் பகுதிகளில் விபத்துகள் அதிகமாக ஏற்படும் இடமாக இந்த இடம் திகழ்கிறது. சில நேரங்களில் விபத்தை ஏற்படுத்திய வாகனங்கள் நிற்காமல் சென்று விடுகின்றன. இதனால் வாகனம் குறித்த அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது. எனவே இவ்விடத்தில் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் எனவும், வாகன விபத்தை தடுக்க போதிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×