search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில்  வீட்டின் பூட்டை உடைத்து நகை-ெவள்ளி பொருட்கள் கொள்ளை
    X

    கொள்ளயைர்களால் உைடக்கப்பட்ட பீரோவை படத்தில் காணலாம்.

    திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-ெவள்ளி பொருட்கள் கொள்ளை

    • கணவன் இறந்துவிட்ட நிலையில், மகன் கவுதம் வீட்டில் வசித்து வருகிறார்
    • சென்னையில் படித்து வரும் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு விஜயலட்சுமி சென்னைக்கு சென்றுள்ளார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராசு. அவரது மனைவி விஜயலட்சுமி. இவரது கணவன் இறந்துவிட்ட நிலையில், மகன்கவுதம் வீட்டில் வசித்து வருகிறார். கவுதம் சென்னையில் தங்கி படித்து வரும் நிலையில், விஜயலட்சுமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகின்றார். சம்பவத்தன்று சென்னையில் படித்து வரும் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு விஜயலட்சுமி சென்னைக்கு சென்றுள்ளார்.

    நேற்று இரவு மீண்டும் வந்து வீட்டை பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 6 பவுன் நகைமற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திண்டிவனம் போலிசார் நேரில் பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு தங்க நகை திருடிய மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

    Next Story
    ×