search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடகரையில்  4 இடங்களில்  உயர் கோபுர மின்விளக்கு சேவை
    X

    வடகரையில் 4 இடங்களில் உயர் கோபுர மின்விளக்கு சேவை

    • 4 இடங்களில் தென்காசி தொகுதி எம்.பி. மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்குகளின் சேவை தொடக்க விழா நடந்தது.
    • தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், தனுஷ் குமார் எம்.பி. ஆகியோர் மின் விளக்குகளை தொடங்கி வைத்தனர்.

    கடையநல்லூர்:

    செங்கோட்டை அருகே வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட தீ.ப.தெரு , மூனு சுழி ரோடு, வாவா நகரம் பஸ் நிறுத்தம், வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் தென்காசி தொகுதி எம்.பி. மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்குகளின் சேவை ெதாடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு வடகரை பேரூராட்சி மன்ற தலைவரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான ஷேக்தாவூது தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் முகமது உசேன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், தனுஷ் குமார் எம்.பி., முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லதுரை ஆகியோர் மின் விளக்குகளை தொடங்கி வைத்து சிறப்புரை வழங்கினர். துணைத் தலைவர் மாலதி ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ஷெரிப், ஒன்றிய செயலாளர் திவான் ஒலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் செயல் அலுவலர் தமிழ்மணி, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரகுமான், பண்பொழி ஆய்குடி பேரூர் தலைவர்கள் ராஜராஜன், சுந்தர்ராஜன், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் முருகன், மாவட்ட இளைஞர் அணி ஐவேந்திரன் தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×