என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி அருகே சஸ்பெண்டு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் திடீர் சாவு
- தேனி அருகே தலைமை ஆசிரியர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- மீண்டும் பணியில் சேர இருந்த நிலையில் தலைமை ஆசிரியர் திடீரென உயிரிழந்தார்.
வருசநாடு:
தேனி அருகே கடமலைக்குண்டுவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது53). இவர் காமன்கல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்ட இவர் தனது மகன் வீட்டில் தங்கி இருந்தார்.
மேலும் சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்த வழக்கு மதுரை மற்றும் பெரியகுளம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவுபடி அவர் மீண்டும் பணியில் சேரலாம் என மயிலாடும்பாறை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தேனி கல்வி அலுவலகத்தில் கடிதம் பெற்றுக்கொண்டு தனது ஊருக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கிய ரவிச்சந்திரனை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் ரவிச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்