search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரூர் இ.ஆர்.கே. பள்ளி மாணவர்கள் சாதனை
    X

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரூர் இ.ஆர்.கே. பள்ளி மாணவர்கள் சாதனை

    • மாணவி ஷாலினி 485 மதிப்பெண்களும், மாணவி மோனிகா 479 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர்.
    • எங்கள் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 11-ம் வகுப்பு வரை அட்மிஷன் நடந்து வருகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே எருமியாம்பட்டியில் இ.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில்

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி நிஷா 500-க்கு 489 மதிப்பெணகள் பெற்று சாதனை படைத்தார். மாணவி ஷாலினி 485 மதிப்பெண்களும், மாணவி மோனிகா 479 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர்.

    இந்த பள்ளியில் 6 பேர் 475 மதிப்பெண்களுக்கு மேலும், 44 பேர் 400 மதிப்பெண்களுக்கும் மேலும் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 3 பேர் 100-க்கு 100 பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை இ.ஆர்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் தீத்துமாலை, பொறுப்பாளர் பார்த்திபன், மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இ.ஆர்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் கூறுகையில் எங்கள் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 11-ம் வகுப்பு வரை அட்மிஷன் நடந்து வருகிறது என்றார்.

    Next Story
    ×