என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அவர்கள் முறிக்கும்வரை...!!!: என்.டி.ஏ. கூட்டணி குறித்து ஓ. பன்னீர்செல்வம் பதில்
- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு இல்லாததால் செல்லவில்லை.
- பா.ஜனதா முறிக்கும்வரை, பா.ஜனதா உடனான என்னுடைய கூட்டணி தொடரும்
பா.ஜனதா, அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் இடம் பிடித்திருந்த மற்றும் புதிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து, கடந்த 18-ந்தேதி டெல்லியில் கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜனதா முறைப்படி அழைப்பு விடுத்தது.
எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு அருகில் அவர் அமரவைக்கப்பட்டார்.
சமீபத்தில் இந்திய தேர்தல் கமிஷன் அதிமுக-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து, அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.
இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. பதவி பறிக்கப்பட்டபோதிலும், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அ.தி.மு.க. சார்பில் அழைக்கப்பட்டிருந்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காதது பற்றி ஓ. பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ''தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜனதா எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆகவே, நான் செல்லவில்லை. என்னுடனான கூட்டணியை பா.ஜனதா முறிக்கும்வரை, பா.ஜனதா உடனான என்னுடைய கூட்டணி தொடரும்'' எனத் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்