என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளச்சலில் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை - விசைப்படகுகள்-வள்ளங்கள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன
- நேற்று காலை முதல் மேற்கு கடற்கரை பகுதி விசைப்படகினர் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்
- 75 படகுகள் கரை திரும்பி குளச்சல் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட் டுள்ளது
கன்னியாகுமரி :
மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகுகள் மீன் பிடிக்க மத்தியரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது.
இந்த தடைக்காலம் குமரி மாவட்டத்தில் 2 பருவ காலமாக உள்ளது. கன்னியாகுமரி சின்னமுட்டம் கடல் பகுதிகள் கிழக்கு கடற்கரையில் உள்ளதால் அங்கு கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் வரை தடைக்காலம் அமலில் இருந்தது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்கள் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
இந்த கடற்கரையில் கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி (நேற்று முன்தினம்) நள்ளிரவு வரை தடைக்காலம் அமலில் இருந்தது. இதையடுத்து நேற்று காலை முதல் மேற்கு கடற்கரை பகுதி விசைப்படகினர் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதற்காக விசைப்படகினர் கடந்த சில நாட்களாக தயாராகி வந்தனர்.
இந்நிலையில் கடலில் நேற்று முதல் 3 ம் தேதிவரை மணிக்கு 50 கி.மீ.வேகம்வரை சூறைக்காற்று வீசும் என மீன்துறை மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இந்த தகவல் வருவதற்கு முன்பே விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று விட்டன.மீன் பிடிப்பதற்கு சென்ற படகுகள் கடலில் வீசிய காற்றில் தொடர்ந்து படகை செலுத்த முடியாததால் அவை பாதியிலேயே கரை திரும்பின. நேற்று இரவு வரை சுமார் 75 படகுகள் கரை திரும்பி குளச்சல் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட் டுள்ளது. மீதி படகுகள் கரையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றன என மீனவர்கள் தெரிவித்தனர். 2 மாத தடைக்காலத்திற்கு பின்பு மீண்டும் மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் முதல் நாளிலேயே நேற்று பாதியிலேயே கரை திரும்பியதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். அவர்களது வலைகளில் குறைந்த அளவிலான கணவாய் மீன்கள் மட்டுமே சிக்கி இருந்தன. இன்றும் கடலுக்கு செல்ல முடியாததால் விசைப் படகுகள், பைபர் வல்லங்கள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்