search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளம் அருகே மருமகனை அரிவாளால் வெட்டிய மாமனார் கைது
    X

    கோப்பு படம்

    பெரியகுளம் அருகே மருமகனை அரிவாளால் வெட்டிய மாமனார் கைது

    • தனது மாமனாரிடம் மருமகன் ரூ.1லட்சம் கடன்பெற்றிருந்தார். இதுதொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சிைன ஏற்பட்டு வந்தது.
    • சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றிய நிலையில் அரிவாளால் மருமகனை சரமாரியாக வெட்டினார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சேர்ந்தவர் அக்னிவீரா(43). இவருக்கும் கம்பம் கே.கே.பட்டியை சேர்ந்த கண்ணுச்சாமி மகள் உமாமகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    அக்னிவீராவுக்கு சரியான வேலை கிடைக்காததால் அவரது மனைவி மகளிர் குழுவில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தனது மாமனாரிடம் ரூ.1லட்சம் கடன்பெற்றிருந்தார். இதுதொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சிைன ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றிய நிலையில் கண்ணுச்சாமி அரிவாளால் அக்னிவீராவை சரமாரியாக வெட்டினார். மேலும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டிச்சென்றார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×