search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூச்சி மருந்து குடித்து விவசாயி சாவு
    X

    பூச்சி மருந்து குடித்து விவசாயி சாவு

    • வீட்டில் பூச்சி செல்வம் மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பைரநத்தம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது40). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமான நிலையில் மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்த்து வந்தனர். இதனால் செல்வம் குடிப்பழக்கம் ஏற்பட்டது.

    இதில் மன விரக்தி அடைந்த செல்வம் கடந்த 20-ந்தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் இவரது உடலை மீட்டு பாப்பாரப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×