search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூரில்  பிரபல ரவுடி சாவு
    X

    கடையநல்லூரில் பிரபல ரவுடி சாவு

    • கொல்லி மாடசாமி மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • போலீசார் கொல்லி மாடசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள கொல்லி மாடசாமி என்பவர் கடந்த 2020 -ம் ஆண்டு இடப்பிரச்சனை காலமாக அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரை கூட்டாளியுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார். இவர் மீது கடையநல்லூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்து குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு படுத்திருந்த அவர் நள்ளிரவில் திடீரென மலம் கழிப்பதற்காக வெளியில் சென்றார்.

    அதன் பின்னர் அவர் வீடு திரும்பி வராததால் காலையில் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்பொழுது அருகில் உள்ள மரம் அருகே இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே இது குறித்து கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் கொல்லி மாடசாமியின் உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா? அல்லது இயற்கை மரணம் அடைந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×