என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடையநல்லூரில் பிரபல ரவுடி சாவு
- கொல்லி மாடசாமி மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
- போலீசார் கொல்லி மாடசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள கொல்லி மாடசாமி என்பவர் கடந்த 2020 -ம் ஆண்டு இடப்பிரச்சனை காலமாக அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரை கூட்டாளியுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார். இவர் மீது கடையநல்லூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
இவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்து குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு படுத்திருந்த அவர் நள்ளிரவில் திடீரென மலம் கழிப்பதற்காக வெளியில் சென்றார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பி வராததால் காலையில் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்பொழுது அருகில் உள்ள மரம் அருகே இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே இது குறித்து கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் கொல்லி மாடசாமியின் உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா? அல்லது இயற்கை மரணம் அடைந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்