search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழை
    X

    (கோப்பு படம்)

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழை

    • புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
    • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்தன.

    இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, அரும்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், மாம்பலம், பல்லாவரம், எழும்பூர், புரசைவாக்கம், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் பெய்து வரும் மழை காரணமாக சாலைகளின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    Next Story
    ×