search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில்  டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா
    X

    பக்தர்களுக்கு லட்டு வழங்கப்பட்டபோது எடுத்தபடம்.


    தென்காசியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா

    • இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • பக்தர்களுக்கு பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் அகரகட்டு லூர்து நாடார் இனிப்பு வழங்கினார்.

    தென்காசி:

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் வழிகாட்டுதலின் படி பேரமைப்பு சார்பில் தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பேரமைப்பின்மாநில துணைத்தலைவர் அகரகட்டு லூர்து நாடார் இனிப்பு வழங்கினார். இதைதொடர்ந்து கீழப்புலியூர் முப்பிடாதி அம்மன்கோவிலில் அலங்க ரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் இந்திய நாடார்கள் பேரவைப்பின் மத்திய மாவட்ட தலைவர் ஆனந்த் காசிராஜன், வடக்கு மாவட்ட தலைவர் சூரிய பிரகாஷ், தெற்கு மாவட்ட தலைவர் ராஜா, தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×