search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்- தலைமை கழகம் அறிவிப்பு
    X

    தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்- தலைமை கழகம் அறிவிப்பு

    • தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான கழக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது
    • பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் விவரம் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படும்.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது-

    தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான கழக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அரசு ஊழியர், ஆசிரியர், மாணவர், மகளிர், கழனியில் பாடுபடும் உழவர், ஆலையில் உழைக்கும் தொழிலாளி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நலன் பேணும் கழக அரசின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகுத் திட்டங்களையும், கழக அரசின் சாதனைகளையும், மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 72 கழக மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி ஆகிய அமைப்புகளில் வருகிற 7-ந்தேதி மற்றும் 8, 9 ஆகிய நாட்களில் "திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்" நடைபெறும்.

    பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் விவரம் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×