search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
    X

    வெற்றி பெற்றவர்களுக்கு கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி கோப்பை வழங்கிய போது எடுத்த படம்.

    மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

    • பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12-ம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • இந்த போட்டியில் 40-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் பில்லர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12-ம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் 40-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பிலிக்கல்பாளையம் பில்லர்ஸ் கிரிக்கெட் கிளப் அணிக்கு முதல் பரிசாக ரூ.15,012, வேலாயுதம்பாளையம் எஸ்.எஸ்.பாண்டியன் அணிக்கு 2-ம் பரிசாக ரூ.10,012, வெங்கரை பெப்சி அணிக்கு 3-ம் பரிசாக ரூ.7,012, கொடுமுடி கே.எம்.டி அணிக்கு 4-ம் பரிசாக ரூ.5,012 வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி ராமலிங்கம், தீபா மற்றும் வார்டு கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு வங்கி பிரதிநிதிகள், பில்லர்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×