என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தருமபுரி செந்தில் பள்ளி மாணவர்கள் சாதனை
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களும் 100 தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2022 - 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களும் 100 தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தான்ய ஸ்ரீ 496, கோபிகா - 495, எழில் அரசி - 494, மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
8 மாணவர்கள் 490-க்கு மேலும், 25 மாணவர்கள் 480-க்கு மேலும், 82 மாணவர்கள் 450-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். பாடவாரியாக முழு மதிப்பெண்கள் (100,100) ஆங்கிலம்-1 மாணவி, கணிதம்-12 மாணவர்களும், அறிவியல்-6 மாணவர்களும், சமூக அறிவியல்-6 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
இதே போல் பிளஸ்-1 தேர்வில் அனிருத்-589, மதிப்பெண்களும், விபுஷா -587, மதிப்பெண்களும் பரத்குமார் -584. மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
580 மதிப்பெண்களுக்கு மேல் 4 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 110 மாணவர்களும், மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 100, 100 பெற்றவர்கள் இயற்பியல்-2, விலங்கியியல்-1, கணிணி அறிவியல்-1, கணினிப்பயன்பாடுகள்-1,
இதேபோல் பிளஸ்-2 பொதுத்தேர்வில் போற்றிநாதன் - 593, மதிப்பெண்களும் தேவிகா- 592 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
590 மதிப்பெண்களுக்கு மேல் 4 மாணவர்களும், 580 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 18 மாணவர்களும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 25 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 31 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 97 மாணவர்களும், மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
முதன்மை பாடங்களான நான்கு பாடங்களிலும் (400,400) மதிப்பெண் பெற்றவர்கள் 1. கனிஷ்வரன் 2. தேவிகா பாடவாரியாக முழு மதிப்பெண்கள் (100,100) பெற்றவர்கள் கணிதம்-5, இயற்பியல்-1, வேதியியல்-7, உயிரியல்-6, கணிணி அறிவியல்-5, கணக்குப்பதிவியல்-1, வணிகவியல்-1, பொருளியல்-1, வணிகக்கணிதம்-1.
2022-2023-ஆம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களை செந்தில் குழுமத் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செந்தில் கல்வி குழுமங்களின் செயலாளர் தனசேகர், நிர்வாக அலுவலர் சக்திவேல், முதல்வர் வள்ளியம்மாள், முதல்வர்(நிர்வாகம்) ரபிக் அஹமத், மற்றும் துணைமுதல்வர் கவிதா மற்றும் ஆசிரியர்கள் மனதார வாழ்த்தினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்