search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்காக மேற்கொள்ளும் பணிகளுக்கு தடையில்லை நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு
    X

    கோப்பு படம்

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்காக மேற்கொள்ளும் பணிகளுக்கு தடையில்லை நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு

    • கொடைக்கானல் ஏரி மாசுபடுவதாக கூறி கொடைக்கானலைச் சேர்ந்த ஒருவர் பொதுநல மனு ஒன்றை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
    • மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பினால் ஏரியை ச்சுற்றி நடைபெற இருக்கும் பணிகள் விரைவில் தொட ங்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

    கொடைக்கால்:

    கொடைக்கானல் ஏரிச்சாலையைச்சுற்றிலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் மகிழ்விக்கும் வகையிலும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதற்கு நகராட்சி சார்பில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியது.

    இந்தப் பணிகளால் கொடைக்கானல் ஏரி மாசுபடுவதாக கூறி கொடைக்கானலைச் சேர்ந்த ஆறுமுக வேலன் என்பவர் பொதுநல மனு ஒன்றை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கொடைக்கானல் ஏரியைச்சுற்றிலும் தடைசெய்யப்பட்ட பகுதி யில் உரிய அனுமதி இன்றி நகராட்சி நிர்வாகம் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.ஏரியை ஒட்டி கழிப்பறையும் அமைக்கப்படுகிறது.

    விதி மீறிய இந்த நிகழ்வால் ஏரி மாசுபடும் ஏரியை பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் ஏரிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.எனவே இவ்வாறான விதி மீறிய கட்டுமானத்திற்கு தடை விதித்து கட்டுமான பொரு ட்களை உடனே அகற்றிட உத்தரவிடவேண்டும் என நீதிபதியிடம் முறை யிட்டிருந்தார்.இந்த மனுவை நீதிபதிகள் பிரகாஷ், ஹேமலதா அமர்வு விசா ரித்தது. இதற்கான பதில் மனுவை கொடை க்கானல் நகராட்சியும் தாக்கல் செய்திருந்தது.அந்த மனுவில் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் பிளாஸ்டிக் பாட்டி ல்கள் மற்றும் கழிவுகளை ஏரியில் வீசிச் செல்கின்றனர்.

    இதை தடுக்க ஏரியைச் சுற்றிலும் வேலி அமைக்க ப்படுகிறது.பாதசாரிகள் நடமாட நடை பாதை, சைக்கிள் ஓடுதளம், மிதவை ப்படகு க்குழாம்,ரசாயனக் கழிவுகளை அகற்றி தண்ணீ ரின் தரத்தை மேம்படுத்தும் வகையில் நவீன தொழி ல்நுட்ப வசதி அமைக்கப்ப டும்.ஏற்கனவே இருந்த பழைய கழிப்பறையை அகற்றி அதே இடத்தில் புதிதாகவும், கூடுதலாக ஒரு கழிப்பறையும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அமைக்கப்படும்,

    இந்தத் திட்டங்களுக்காக ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அனுமதி பெற ப்பட்டு டெண்டர் நடத்தி பணிகள் மேற்கொள்ள ப்படுகிறது. சிலரது தூண்டுதலின் பேரில் உள்நோக்கத்தில் மனுதாரர் மனு செய்துள்ளார் என தெரிவித்திருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் ஏரியைச் சுற்றி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சுற்றுலா பயணிகளின் நலன் கருதிமேற்கொள்ள ப்பட்டு வரும் பணிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக்கூறி ஆறுமுக வேலனின் மனுவை தள்ளுபடி செய்கிறோம் எனத் தீர்ப்பளித்தனர்.இந்தத் தீர்ப்பினால் ஏரியை ச்சுற்றி நடைபெற இருக்கும் பணிகள் விரைவில் தொட ங்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

    Next Story
    ×