search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம்
    X

    தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம்

    • ராஜேந்திரன் யானையிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது, கால் இடறி கீழே விழுந்தார்.
    • யானை தாக்கி விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருவது குறிப்படதக்கது.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் முற்றிலும் வறண்டுள்ளன. மேலும் இலை, தழைகளும், காய்ந்து சருகாகி வருவதால், வன விலங்கினங்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. இதனால், பயிர் சேதம் ஏற்படுவதோடு உயிர் சேதமும் அதிகரித்துள்ளது.

    தேன்கனிக்கோட்டைம் அருகே ஆலள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன்(வயது 48)என்பவர், இன்று காலை விவசாய நிலத்திற்கு சென்றார்.

    அப்போது, அங்கு வந்த ஒற்றை யானையை கண்டு திடுக்கிட்டார். திடீரென ராஜேந்திரனை நோக்கி வந்துள்ளது. இதையடுத்து ராஜேந்திரன் யானையிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது, கால் இடறி கீழே விழுந்தார். இதில், அந்த யானை ராஜேந்தரின் வலது காலை மிதித்து, தும்பிக் கையால் தூக்கி வீசி விட்டு சென்றது.

    ஒற்றை யானை தாக்குதலில் படுகாயமடைந்த ராஜேந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவம்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது கிராம மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் வன துறையினரை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேன்கனிகோட்டை டி.எஸ்பி. சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    மேலும் அப்பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையிடம் சிக்கி விவசாயி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று அப்பகுதியில் யானை தாக்கி விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருவது குறிப்படதக்கது.

    Next Story
    ×