search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்திருப்பேரையில் கடம்பாகுளத்தை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    தென்திருப்பேரையில் கடம்பாகுளத்தை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

    • கடம்பாகுளம் , சீரமைப்பு பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதனை தடுத்திட கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மள்ளர் பேராயம் தலைவர் சுபாஷினி மள்ளத்தி கண்டன உரையாற்றினார்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பஸ் நிலையம் அருகே மள்ளர் பேராயம் சார்பில் கடம்பாகுளம் மராமத்து - சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்திட வலியுறுத்தியும், சீரமைப்பு பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் அதனை தடுத்திட கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வக்கீல் சரவணன் தலைமை தாங்கினார். மோசஸ் பாண்டியன், சுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரபாகரன் வரவேற்று பேசினார். இதில் கடம்பாகுளம் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க தலைவர் உத்திரம், தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மள்ளர் பேராயம் தலைவர் சுபாஷினி மள்ளத்தி கண்டன உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட இளைஞரனி செயலாளர் யேசுதாஸ், மனித நேய மக்கள் ஜனநாயக கட்சி ஜெயசீலன், கருங்குளம் ஒன்றிய மள்ளர் பேராய செயலாளர் பொன்மயில் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஆத்தூர் கீரனூர் விவசாய பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆழ்வை ஒன்றிய மள்ளர் பேராய செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×