search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில்  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

    சிவகிரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    • ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    • வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைத்ததை கண்டித்தும், அக்னிபாத் திட்டத்தை வாபஸ் பெற கோரியும், ஜி.எஸ்.டி. வரியை திரும்பப்பெற கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சந்தன பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகச்சாமி மற்றும் தென்காசி மாவட்ட நகர பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூராட்சி பொறுப்பாளர்கள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமர், சேத்தூர் நகர செயலாளர் அருண்குமார், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மாரிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×