search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    26-ந்தேதி தொடங்குகிறது மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தசரா விழா
    X

    கோப்பு படம்

    26-ந்தேதி தொடங்குகிறது மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தசரா விழா

    • மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.
    • வருகிற 5-ந்தேதி தசரா எனப்படும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. அன்று காலை 8 மணிக்கு மங்களவாத்தியங்களுடன் விழா தொடங்கி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதணை, லலிதாசகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.

    அதனைதொடர்ந்து மாலை அம்மனுக்கு ராஜஅலங்காரம் செய்யப்படுகிறது. மேலும் தினந்தோறும் வெவ்வேறு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பாலாம்பிகை, அர்த்தநாரீஸ்வரர், கஜலட்சுமி, ராஜராஜேஸ்வரி, வித்யாஅம்மன், காமாட்சியம்மன், மகாதுர்க்கை, சரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங்கள் நடைபெறுகிறது.

    5-ந்தேதி பக்தர்கள் வேடமணிந்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மேலும் அன்று மாலை 6 மணிக்கு தசரா எனப்படும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    Next Story
    ×