search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நுகா்வோா் குறைதீா் கூட்டம் வருகிற 7-ந்தேதி
    X

    நுகா்வோா் குறைதீா் கூட்டம் வருகிற 7-ந்தேதி

    • நாமக்கல்லில் வருகிற 7-ந்தேதி நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும்.
    • பொது விநியோகத்திட்டம் தொடா்பான கோரிக்கை களைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர் நலன் கருதி அனைத்து துறைகளின் முதல்நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகா்வோர் அமைப்புகள் ஆகியோருடன் காலாண்டு நுகா்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. பொது விநியோகத்திட்டம் தொடா்பான கோரிக்கை களைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×