என் மலர்tooltip icon

    சென்னை

    • அதிமுகவில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரை 14 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
    • முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

    பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து ஒன்றாக பங்கேற்று, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

    ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அங்கு சசிகலாவையும் சந்தித்தனர்.

    இதற்கிடையே, செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டதற்கு, அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்கா விட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    அதிமுகவில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரை 14 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவில், சசிகலா முதல் செங்கோட்டையன் வரை பல்வேறு காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அந்த வகையில், கடந்த 2017ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்த சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நீக்கம் செய்யப்பட்டனர். இருவரும் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்கிற தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

    கே.சி.பழனிசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, ஓ.பி.ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அன்வர் ராஜா, மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், இன்று அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக இருந்த ஜெய ஸ்ரீ ஐபிஎஸ், ஊர்க்காவல் படை ஐஜியாக மாற்றம்.
    • சட்டம் ஒழுங்கு எஸ்பி ஆக உள்ள முத்தரசி ஐபிஎஸ், செய்தித் தொடர்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 3 ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை ஜெயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக இருந்த ஜெய ஸ்ரீ ஐபிஎஸ், ஊர்க்காவல் படை ஐஜியாக மாற்றம்.

    தொழில்நுட்ப பிரிவு ஐஜி ஆக உள்ள அவினாஷ் குமார் ஐபிஎஸ், குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சட்டம் ஒழுங்கு எஸ்பி ஆக உள்ள முத்தரசி ஐபிஎஸ், செய்தித் தொடர்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து டிசிபி-யான சங்கு செங்குன்றத்திற்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    காவல் பயற்சி பள்ளி எஸ்பி ஆக இருந்த மகேஸ்வரி, போலீஸ் பயிற்சி கல்லூரி எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • வரும் நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்.
    • சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    பௌர்ணமி கிரிவல நிகழ்வை ஒட்டி நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

    • தமிழ் இனத்தின் மீது தொடர்ச்சியாக அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
    • பெரும் குற்றச்செயல்களில் ஈடுபடுவது வடவர்கள்தான் என்பது பிரதமருக்குத் தெரியுமா?

    "தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடியின் பொய்ப் பரப்புரை, இனவெறி பாகுபாட்டின் உச்சம். தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி" என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்! தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி!

    தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பச்சைப் பொய்யைப் பரப்பரை செய்வது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும்.

    அற்ப அரசியல் இலாபத்திற்காக பிரதமர் மோடி தமிழர்கள் மீது வரலாற்று பெரும்பழியைச் சுமத்தியுள்ளது இனவெறி பாகுபாட்டின் உச்சமாகும். பிரதமர் மோடி தமிழ் இனத்தின் மீது தொடர்ச்சியாக அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

    ஏற்கனவே ஒடிசா மாநிலத் தேர்தலின்போது தமிழர்களைத் திருடர்கள் என்றும், ஓடிசாவை தமிழன் ஆளலாமா? என்றும் இன வெறுப்பை விதைத்த பிரதமர் மோடி, அதன் நீட்சியாக தற்போது தமிழர்களை வன்முறையாளர்களாக, கட்டமைப்பது, தமிழினத்தை இழிவுப்படுத்தும் கொடுஞ்செயலாகும். வந்தாரை வாழ வைத்ததோடு, ஆளவும் வைத்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகந்தழுவி நேசித்து நின்ற ஓர் இனத்தை திருடர்கள், வன்முறையாளர்கள் என குற்றம் சுமத்துவது தமிழ் இனத்திற்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

    தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதாக வெளியான காணொளிகள் அனைத்தும் பொய்யானது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது பிரதமர் மோடிக்கு தெரியாதா? உங்கள் கூட்டணியின் முதல்வர் நிதிஷ்குமார் அரசு அனுப்பிய ஆய்வுக்குழு தமிழ்நாட்டில் அப்படி எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தது தெரியாதா?

    அப்போலி காணொளிகளைப் பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியாதா? பீகார் சட்டமன்றத்திலேயே அவை போலிக் காணொளிகள் என்று ஒப்புக்கொண்டதுதான் பிரதமருக்கு தெரியாதா? அவையெல்லாம் தெரிந்தும் இப்படி ஒரு அவதூறை பிரதமர் மோடி பரப்புவது தமிழர் விரோதப்போக்கன்றி வேறென்ன?

    உண்மையில் தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதில்லை. பீகாரிகள் உள்ளிட்ட வடமாநிலத்தவரால் தமிழர்கள்தான் தாக்கப்படுகின்றனர் என்பது பிரதமர் மோடிக்குத் தெரியுமா? தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கூட்டுப்பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பெரும் குற்றச்செயல்களில் ஈடுபடுவது வடவர்கள்தான் என்பது பிரதமருக்குத் தெரியுமா?

    கலவரம் செய்தவர்களைக் கட்டுப்படுத்தச் சென்ற தமிழ்நாடு காவல்துறையினரையே வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கினர் என்பதாவது பிரதமருக்கு தெரியுமா? அப்போதெல்லாம் பிகாரிகள் தமிழர்களைத் தாக்குகின்றனர் என்று பேசாத பிரதமர் மோடி, வடவர்கள் தமிழ்நாட்டில் செய்யும் வன்முறைகள் தவறு என்று பேசாத பிரதமர் மோடி, தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்ற ஒரு பச்சை பொய்யைக் கூறுவது எதனால்? அற்ப தேர்தல் வெற்றிக்குத்தானே?

    இராமநாதபுரத்தில் மீனவப்பெண் வடவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டபோது வாய் திறவாத மோடி, அம்பத்தூரிலும், ஈரோட்டிலும் தமிழகக் காவலர்களை வடவர்கள் தாக்கியபோது பேசாத பிரதமர் மோடி, வட மாநிலங்களில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழ்ப்பிள்ளைகள் வடவர்களால் மர்மமான முறையில் கொல்லப்பட்டபோது கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, வடமாநிலங்களில் விளையாடச் சென்ற தமிழக கபடி வீரர்கள், வடவர்களால் தாக்கப்பட்டபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத மோடி, முன்பதிவு செய்யப்பட்ட தமிழ்நாட்டு தொடர்வண்டி இருக்கைகளை ஆக்கிரமித்து வடவர்கள் அட்டூழியம் செய்தபோது அமைதி காத்த மோடி, ஆந்திராவில் 20 தமிழர்கள் அநியாயமாகச் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், கேரளாவிலும் கர்நாடகாவிலும் தமிழர்கள் தாக்கப்பட்டு

    அவர்களது உடைமைகள் பறிக்கப்பட்டபோதும், எல்லாவற்றுக்கும் மேலாக இன்றுவரை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், படகுகள் பறிக்கப்படுவதும், சிறைப்படுத்தப்படுவதும் தொடர்வது குறித்து எந்தவொரு கண்டனமும் தெரிவிக்காத பிரதமர் மோடி, எந்தவொரு குற்றமும் செய்யாத தமிழர்களை மட்டும் வன்முறையாளர்களாக, திருடர்களாகக் கட்டமைப்பது தமிழர்களுக்கு எதிரான இனவெறி பாகுபாடு அன்றி வேறென்ன? இத்தனை காலமும் மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து பிளந்த பாஜகவும், பிரதமர் மோடியும், இனி அது எடுபடாது என்று தெரிந்தவுடன் வடவர்களின் வாக்குகளைப் பெற இந்தி பேசும் மக்களிடம் இனவெறியைத் தூண்டுகின்றனர்.

    இந்தியப் பிரதமரின் பொய்ப்பேச்சு, தமிழர்களைத் திருடர்கள், வன்முறையாளர்கள் என்று உலக நாடுகள் எண்ண வழிவகுக்காதா? இந்திய அரசமைப்பின் மீது உறுதியேற்று, ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களுக்குமான பிரதமர் ஓர் இனத்தை மட்டும் குறி வைத்து பொய்யைப் பரப்புவது உலக அரங்கில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பிரதமர் மோடிக்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே இத்தகைய அவதூற்றைப் பரப்பி வருகிறாரா?

    இதுதான் பிரதமர் மோடி தமிழர்களுக்குத் தரும் மதிப்பா? இதுதான் இந்திய நாடு பேணும் ஒற்றுமையா? கட்டிக்காக்கும் ஒருமைப்பாடா? வெட்கக்கேடு! தமிழ்நாட்டுக்கு வரும்போது மட்டும் தமிழ் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் பிரதமர் பெருமையாகப் பேசுவது அனைத்தும், தமிழர்களை ஏய்த்து அவர்களின் வாக்குகளைப் பறிக்கும் மலிவான தந்திரம் என்பது மீண்டும் தெளிவாகிறது. இதிலிருந்து இந்திய நாடும், பிரதமரும், அரசும், ஆட்சியாளர்களும் இந்தி பேசும் மக்களுக்கானது மட்டுமே என்பதும், தமிழர்கள் இந்நாட்டின் இரண்டாந்தரக் குடிமக்கள்தான் என்பதும் மீண்டும் மீண்டும் உறுதியாகின்றது. இதையெல்லாம் காணும் தமிழ் இளையோருக்கு இந்த நாட்டின் மீதும், அதன் ஆட்சி முறையின் மீதும் வெறுப்புதான் வருமே அன்றி எப்படி பற்று வரும்?

    இனியும் பிரதமர் மோடியின் தமிழர்கள் மீதான வெறுப்புப் பேச்சு தொடருமாயின், அது வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து, நாட்டினைப் பெரும் அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கிறேன்.

    ஆகவே, பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற இனவெறுப்பு பேச்சை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக்கோர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் ஒடிசா தேர்தலுக்காக தமிழர்களைத் திருடர்களாகவும், பீகார் தேர்தலுக்காக தமிழர்களை வன்முறையாளர்களாகவும் கட்டமைக்கும் பாஜகவுக்கு வரும் 2026 சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 16,648 சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 6 லட்சத்து 78 ஆயிரத்து 34 பேர் மருத்துவப் பயன் பெற்றுள்ளனர்.
    • இந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

    வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளவும், மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்கவும் சுகாதாரத்துறை சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சுகாதாரத் துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடத்திய பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கி 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில், சராசரியாகப் பெய்ய வேண் டிய 86.7 செ.மீ மழையில், இதுவரை 24.9 செ.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

    இருப்பினும், சுகாதாரத் துறை முழு வீச்சில் தயாராக உள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 16,648 சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 6 லட்சத்து 78 ஆயிரத்து 34 பேர் மருத்துவப் பயன் பெற்றுள்ளனர்.

    இந்த முகாம்கள் மூலம் 5,829 காய்ச்சல் பாதிப்புகளும், 51,107 இருமல், சளி பாதிப்பு களும் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு தெருவில் இரண்டு அல்லது மூன்று பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அங்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு இதுவரை 18,725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துரதிர்ஷ்டவசமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளும் இணை நோய்கள் மற்றும் தாமதமாக மருத்துவமனையை அணுகு வது போன்ற காரணங்களால் நிகழ்ந்துள்ளன.

    உயிரிழப்பு இல்லாத நிலையை உருவாக்குவதே அரசின் நோக்கம். கடந்த காலங்களில், 2012-ல் 66 பேரும், 2017-ல் 65 பேரும் டெங்குவால் உயிரிழந்தனர். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தடுப்பு நட வடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டதால் உயிரிழப்புகள் ஒற்றை இலக்கத்தில் கட்டுப் படுத்தப்பட்டுள்ளன.

    டெங்குவைக் கண்டறிய மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் 4,755 ஆய்வகங்கள் செயல்படுகின்றன. இது இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் உள்ள அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

    இந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

    டெங்கு மட்டுமல்லாமல், மலேரியா, சிக்குன்குனியா, டைபாய்டு, எலிக்காய்ச்சல் போன்ற பிற மழைக்கால நோய்களின் பாதிப்பும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணிசமாகக் குறைந்துள்ளது.

    நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் சுமார் 65,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மாநிலம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
    • தமிழ்நாட்டில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    தமிழ்நாடு, இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது.

    முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

    போர்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , போர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து, தமிழ்நாட்டில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    அப்போது போர்டு நிறுவ னத்தின் உயர் அதிகாரிகள் உறுதியளித்தபடி, போர்டு நிறுவனம், ரூ.3250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன என்ஜின் உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றைய தினம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், துறை செயலாளர் அருண் ராய், தலைமைச் செயல் அலுவலர் தாரேஸ் அகமது, போர்டு நிறுவனத்தின் உலகளாவிய இயக்குநர் மார்ட்டின் எவரிட், துணைத் தலைவர் மாத்யூ கோடி லூஸ்கி, தாய்லாந்து திட்டத்தின் மேலாண்மை இயக்குநர் சைமோநேட்டா வெர்டி, இயக்குநர் (உற்பத்தி) தீரஜ் தீக்சித், இயக்குநர் ஸ்ரீபாத் பட் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
    • கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டது உள்ளிட்ட காரணத்துக்காக நீக்கப்பட்டார்.

    கோவை:

    அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பும் வைத்துக்கொண்டது உள்ளிட்ட காரணங்களால் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அறிக்கை மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    இந்நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கோள்வி எழுப்பினர்.

    அப்போது அவர் கூறுகையில், என்னை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து நாளை விரிவாக விளக்கம் அளிக்கிறேன். நாளை காலை 11 மணிக்கு தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாக பேசுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதாவுக்கு ஒப்புதல்.
    • சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல்.

    தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதா, 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதா, சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்ளிட்ட 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    • ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் மதுரையில் சசிகலாவை சந்தித்தனர்.
    • முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து ஒன்றாக பங்கேற்று, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

    ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அங்கு சசிகலாவையும் சந்தித்தனர்

    இதற்கிடையே, செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டதற்கு, அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்கா விட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். அவரிட ம் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளது.

    • கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியது.
    • கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவியை காப்பாற்றச் சென்றபோது விபரீதம்.

    சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந் ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியது.

    கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவியை காப்பாற்றச் சென்ற பெண்களும் அலையில் சிக்கி பலியானதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

    கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவி ஷாலினி, தேவகி செல்வம், பவானி, காயத்திரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீகாரில் பிரதமர் ந்நேரத்திர மோடி பொய் பிரசாரம் செய்கிறார்.
    • பாஜகவினர் பொய்களுக்கு தமிழக மக்கள் என்றும் ஏமாற மாட்டார்கள்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பீகாரில் பிரதமர் ந்நேரத்திர மோடி பொய் பிரசாரம் செய்கிறார்.

    பாஜகவினர் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் கருப்பர்கள் எனக்கூறி தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்.

    பிஹாரில் ஒழுங்காக வேலை கொடுத்திருந்தால் அவர்கள் ஏன் இங்கே வரப்போகிறார்கள்?; வேலை கேட்டு வரும் பிஹார் மக்களுக்கு இங்கு வேலை கொடுத்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

    தமிழகத்திற்கான நிதி, கல்விக்கான நிதி என மாநிலத்திற்கான எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை.

    திமுக கூட்டணி பெற்ற வெற்றி, திமுக ஆட்சியில் தமிழகம் அடைந்து வரும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் பிரதமர் பேசியுள்ளார்.

    ஆங்கிலேயர்கள் ஆட்சியை விட பிரித்தாளும் சூழ்ச்சியை பிரதமர் செய்கிறார். பாஜகவினர் பொய்களுக்கு தமிழக மக்கள் என்றும் ஏமாற மாட்டார்கள், பீகார் மக்களும் பாஜகவின் பொய்களை அறிவர்.

    பிஹார், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழில் படித்து அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.

    நாங்கள் இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம். இந்திக்காரர்களுக்கு எதிரி அல்ல; முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து திட்டமிட்டு பிரதமர் மோடி பேசியதற்கு திமுக கண்டனம் தெரிவிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தடி நீர் இளநீரைப் போன்ற சுவையுடன் இருந்தது.
    • தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அவை அனைத்தும் சீரழிக்கப்பட்டன.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகள், புளியம்பட்டி, குள்ளக்கவுண்டனூர், பல்பாக்கி, வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, மூங்கில்பாடி, செங்காடு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெள்ளக்கல்பட்டி, மாமாங்கம், கருப்பூர் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களின் வாயிலாகத்தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதற்கு நிலத்தடி நீர் மட்டும் தான் பாசன ஆதாரமாக உள்ளது.

    இத்தகைய நிலையில் ஜாகிர் அம்மாபாளையம் ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்கப்பட்டால் குடிநீர் ஆதாரங்களும், வேளாண்மையும் முற்றிலுமாக அழிந்து விடும்.

    சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தடி நீர் இளநீரைப் போன்ற சுவையுடன் இருந்தது. ஆறுகளிலும் தூய்மையான நீர் ஓடியது. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அவை அனைத்தும் சீரழிக்கப்பட்டன. அந்த சீரழிவுகளை சரி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில், அவற்றை மேலும், மேலும் சீரழிக்கும் சதியில் தமிழக அரசு ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, ஜாகிர் அம்மாபாளையம் ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், பா.ம.க. சார்பில் மக்களைத்திரட்டி நானே தலைமையேற்று போராட்டம் நடத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×