என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டபுள் டக்கர் பஸ்"

    • அமெரிக்க வாழ் தமிழர்கள் இணைந்து தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்காக டபுள் டக்கர் பேருந்தை வழங்கியுள்ளனர்.
    • இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு டபுள் டெக்கர் பேருந்து வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

    சென்னை:

    போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கவும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் ஏறி சென்னை மாநகர சாலைகளின் இருபுறமும் உள்ள அழகை ரசித்தபடியே பயணம் செய்தவர்களின் அனுபவம் மறக்க முடியாத ஒன்றாகும்.

    இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி இந்த பஸ் சேவை தொடங்கியது.

    முதற்கட்டமாக சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு டபுள் டக்கர் பஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிகப்பு நிறம் கொண்ட டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்தது.

    இந்நிலையில் அமெரிக்க வாழ் தமிழர்கள் இணைந்து தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்காகப் புதிய குளிர்சாதன வசதி கொண்ட டபுள் டக்கர் (இரட்டை அடுக்கு) பேருந்தை வழங்கியுள்ளனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கப் பயணத்தின் போது விடுத்த வேண்டுகோளை ஏற்று, அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் இந்தப் பேருந்துக்கான நிதியைத் திரட்டி வழங்கினர்.

    இந்த பேருந்து சேவைக்கு தயாராக உள்ளது. இதனால் இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு டபுள் டெக்கர் பேருந்து வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

    இந்தப் பேருந்து சென்னை நகரின் முக்கியச் சுற்றுலாத் தலங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும்.


    • டபுள் டக்கர் பஸ்சை இயக்க மின் கம்பிகள் தொடாதவாறு அகலமான சாலைகள் இருக்க வேண்டும்.
    • பஸ் நிர்வகிப்பது மற்றும் எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை.

    திருப்பதி:

    திருப்பதி மக்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் ரூ 2 கோடி மதிப்பில் 2 அடுக்குகள் கொண்ட மின்சார ஏ.சி. வாங்கப்பட்டு உள்ளது.

    மாசு கட்டுப்பாட்டை குறைக்கவும், பொதுமக்களுக்கு அதிக சத்தம் ஏற்படுத்தி இடையூறு வராத வகையில் இந்த பஸ் வாங்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிர்வகிப்பது மற்றும் எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை.

    டபுள் டக்கர் பஸ்சை இயக்க மின் கம்பிகள் தொடாதவாறு அகலமான சாலைகள் இருக்க வேண்டும். ஆனால் திருப்பதியில் டபுள் டக்கர் பஸ் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என கூறப்படுகிறது.

    சீனிவாச சேது பாலம் மாஸ்டர் பிளான் சாலைகளில் மட்டுமே இந்த பஸ் இயக்க முடியும்.

    அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி காளஹஸ்தி இடையே செல்லும் டவுன் பஸ்களை திருப்பதி நகருக்குள் திருப்பிவிட பல்வேறு முயற்சிகள் நடந்தது ஆனால் அந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.

    திருப்பதி நகர பகுதிக்குள் சாதாரண பஸ்களையே இயக்க முடியாத நிலையில் டபுள் டக்கர் பஸ் எப்படி இயக்க முடியும் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் டபுள் டக்கர் பஸ்ஸை ஆந்திரா போக்குவரத்து கழகத்திடம் 2,3 நாட்களில் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

    ×