என் மலர்tooltip icon

    சென்னை

    • இரட்டை இலை பலவீனப்பட்டாலும் பரவாயில்லை என கட்சி பதவியை பிடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
    • தி.மு.க.வின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நான் துரோகியா?

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2026 தேர்தலில் தென்மாவட்ட மக்கள் மிக மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமிக்கு பரிசாக அளிப்பர்.

    * பசும்பொன்னுக்கு வந்த செங்கோட்டையனை நீக்கிய இ.பி.எஸ். முடிவை தென்மாவட்ட மக்கள் அவமானமாக கருதுவார்கள்.

    * ஹிட்லரை போல செயல்பட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி கட்சியின் அடிப்படை விதியை மாற்றி விட்டார்.

    * இரட்டை இலை பலவீனப்பட்டாலும் பரவாயில்லை என கட்சி பதவியை பிடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    * தி.மு.க.வின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நான் துரோகியா?

    * கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு காரணமான இ.பி.எஸ்.தான் தி.மு.க.வின் பி டீம்.

    * தகுதியே இல்லாத எடப்பாடி பழனிசாமி வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05.30 மணி அளவில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 08.30 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது.

    இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு, மேலும், கிழக்கு-வடகிழக்கு திசையில், வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக, தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மகாராஷ்டிரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறையக்கூடும்.

    தெற்கு மியான்மார் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
    • நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாகவும், என்ன மாதிரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றலாம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசியல் கட்சி கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாகவும், என்ன மாதிரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றலாம், கூட்ட நெரிசலைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகின்றன. 

    • செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு வந்தது அரசியல் நிகழ்ச்சி அல்ல.
    • முதலமைச்சராக்கிய சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய துரோகி எடப்பாடி பழனிசாமி.

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நிகழ்ச்சி ஏற்பாடுகளை செங்கோட்டையன் பார்வையிட்ட பின்னரே ஜெயலலிதா ஒப்புதல் அளிப்பார்.

    * செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு வந்தது அரசியல் நிகழ்ச்சி அல்ல.

    * அ.தி.மு.க.விற்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் செங்கோட்டையன் ஈடுபடவில்லை.

    * முதலமைச்சராக்கிய சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய துரோகி எடப்பாடி பழனிசாமி.

    * செங்கோட்டையனை தகுதியே இல்லாத எடப்பாடி பழனிசாமி நீக்கியது கொள்ளிக்கட்டையால் தலையை சொறிவதற்கு சமம்.

    * ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் என்னைப் பார்த்து துரோகி என எடப்பாடி பழனிசாமி பேசுவது சிரிப்பாக உள்ளது.

    * யாரையும் துரோகி என சொல்லுவதற்கு கூட எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே இல்லை.

    * செங்கோட்டையன் சொன்னதுபோல துரோகத்திற்கு நோபல் பரிசு பெறும் தகுதி இ.பி.எஸ்.-க்கு தான் உள்ளது.

    * அ.தி.மு.கவிலிருந்து செங்கோட்டையனை நீக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை. அவர் அழிவை தேடிக்கொள்கிறார்.

    * தகுதியில்லாத எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை நீக்குவதா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எண்ணற்ற போராளிகளுக்கு எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் இல் என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
    • போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும்.

    சென்னை:

    தமிழ்நாடு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் இல் என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

    போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! தமிழ்நாடு போராடும்_ தமிழ்நாடுவெல்லும் என கூறியுள்ளார். 



    • மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்!
    • தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்!

    சென்னை:

    தமிழ்நாடு தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்!

    மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!

    தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்!

    இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! என கூறியுள்ளார். 



    • ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
    • எந்தத் தவறும் செய்யவில்லை என அந்த துறையின் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.

    தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2,538 பணியாளர்கள் நியமன ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

    ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.

    அரசு வேலை பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகாரில், எந்தத் தவறும் செய்யவில்லை என அந்த துறையின் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    • கரையான் புற்றை அரிப்பது போல எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அரித்துக் கொண்டிருக்கிறார்.
    • முதலமைச்சரின் பலம் பொருந்திய கரத்தை மேலும் வலுவாக்குவதற்கு அனைவரும் வருவார்கள்.

    சென்னை:

    கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பல்ல அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என அஜித் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

    இதனிடையே, அஜித் பேட்டி குறித்து அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அமைச்சர் சேகர்பாபு, நடிகர் அஜித்தின் பேட்டியை தான் இன்னும் பார்க்கவில்லை என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி தனது ராஜதந்திர நடவடிக்கைகளால் அ.தி.மு.க.வை அழித்து கொண்டிருக்கிறார். கரையான் புற்றை அரிப்பது போல எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அரித்துக் கொண்டிருக்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி தனது செயல்பாடுகளால் அ.தி.மு.க.வை அழித்து பா.ஜ.க.வை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதை உண்மையான அ.தி.மு.க.வினர் உணர்ந்து இருக்கிறார்கள்.

    முதலமைச்சரின் பலம் பொருந்திய கரத்தை மேலும் வலுவாக்குவதற்கு அனைவரும் வருவார்கள் என்றார். 

    • நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    தங்கம் விலை ஏற்றம் கண்டு, கடந்த 18-ந்தேதியில் இருந்து விலை குறையத் தொடங்கியது. கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வரை சென்றது. தொடர்ந்து விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து மிரட்டியது.

    தங்கம் விலை நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் குறைந்த நிலையில், பின்னர் பிற்பகலில் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து விற்பனையானது.

    நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.11,310-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    31-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400

    30-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400

    29-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,600

    28-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,600

    27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    31-10-2025- ஒரு கிராம் ரூ.165

    30-10-2025- ஒரு கிராம் ரூ.165

    29-10-2025- ஒரு கிராம் ரூ.166

    28-10-2025- ஒரு கிராம் ரூ.165

    27-10-2025- ஒரு கிராம் ரூ.170

    • நான் சம்பாதித்த பணத்தில் சொந்த ஊரில் இடம் வாங்கி இருக்கிறேன்.
    • நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் எங்களிடம் அன்பாக பழகுகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இதற்கிடையே பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, முசாபர்பூரில் நேற்று முன்தினம் நடந்த பா.ஜ.க. கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அதில் அவர் ராகுல்காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு விஷயங்களை பேசினார்.

    அப்போது, 'கர்நாடகா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பீகாரைச் சேர்ந்த மக்களை திட்டுகிறார்கள். அவர்களின் கூட்டணி கட்சியான தி.மு.க.வும் தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த மக்களை துன்புறுத்துகிறார்கள்' என்று பேசியிருந்தார்.

    பிரதமரின் இந்த பேச்சு தமிழக கட்சித்தலைவர்களை கொதிப்படைய செய்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க,ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் மோடி சொன்னது போல, தமிழ்நாட்டில் தங்கி வேலை பார்க்கும் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? என்பது குறித்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் வருமாறு:-

    சென்னையில் கட்டிட வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தன்வீர் கூறியதாவது:-

    நான் 5 ஆண்டுகளாக கட்டிட வேலை பார்க்கிறேன். குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு வந்தேன். வாரத்துக்கு 6 நாட்கள் வேலை பார்த்தால் போதும். ஒரு நாள் விடுமுறை. அந்த நாளில் எங்களை வேலை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்த மாட்டார்கள். விருப்பம் இருந்தால் வேலை பார்க்கலாம்.

    ஒரு நாள் சம்பளம் ரூ.1,000. எங்களுடன் சேர்ந்து தமிழ் ஆட்களும் வேலை செய்கிறார்கள். என்னை போல, பலர் இங்கு தங்கி பணி செய்கிறார்கள். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சொந்த மாநிலத்தில் எங்கள் வீட்டில் எப்படி இருந்து வேலை பார்ப்போமோ? அதேபோல்தான் இங்கு இருந்து வேலை பார்க்கிறேன்.

    சென்னையில் பரோட்டா மாஸ்டராக இருக்கும் பப்பு குமார்:-

    சென்னைக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. ஓட்டலில் முதலில் 'சப்ளையராக' பணியை தொடங்கி, இப்போது பரோட்டா மாஸ்டராக இருக்கிறேன். கடை உரிமையாளர் தங்குவதற்கு வசதியும் செய்து கொடுத்து இருக்கிறார். சொந்த ஊரில் இருப்பது போலவே உணருகிறேன்.

    கடைக்கு சாப்பிட வருபவர்களும், கடை உரிமையாளர்களும் கடுமையாக நடந்தது கிடையாது. எங்களை யாரும் துன்புறுத்தவில்லை. எப்போது லீவு கேட்டாலும் உரிமையாளர் முகம் சுழிக்காமல் கொடுப்பார். தமிழ் ஆட்களுக்கு என்ன சம்பளம் தருகிறார்களோ? அதே சம்பளத்தைதான் எங்களுக்கு கொடுக்கிறார். இங்கு வந்து அழகாய் தமிழ் பேசக்கற்றுக்கொண்டுவிட்டேன்.

    சென்னையில் வேலை பார்க்கும் பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த ஷரீப், சபீர், காசிம் ஆகியோர் கூறியதாவது:-

    சென்னை எங்கள் ஊரை விட அருமையாக இருக்கிறது. பருப்பு சாதம், சப்பாத்தி என இருமாநிலங்களுக்கும் பொதுவான உணவுகள் நிறைய இருக்கின்றன. தமிழக மக்களும் எங்கள் மீது அன்பு செலுத்தி, வேலை தந்து அழகு பார்க்கிறார்கள். கொடுக்கும் வேலையை நாங்களும் சலிக்காமல் திறம்பட செய்துகொடுக்கிறோம். அதனால் எங்கள் மீது அவர்களுக்கு நன்மதிப்பு உருவாகியிருக்கிறது.

    பீகார் மாநிலத்தை சேர்ந்த சர்வன்குமார்:-

    நான் 6 ஆண்டுகளாக சென்னையில் தங்கி ஓட்டலில் பணிபுரிந்து வருகிறேன். ஆரம்பத்தில் சாதாரண ஆளாகவே வந்தேன். இப்போது மாஸ்டர் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். வேலையை நன்றாக கற்றுக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இங்கு சூழல் இருக்கிறது. எனக்கு நாளொன்றுக்கு ரூ.1,100 சம்பளம் கிடைக்கிறது. கடை விடுமுறையை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தவறாமல் வேலைக்கு செல்வேன். கடைக்காரரும் என்னை கனிவோடு பார்த்து கொள்கிறார். நான் சம்பாதித்த பணத்தில் சொந்த ஊரில் இடம் வாங்கி இருக்கிறேன்.

    சென்னையில் உள்ள பீகார்வாசிகள் நலச்சங்கத்தை சேர்ந்த ஆசிஷ்குமார் கூறியதாவது:-

    பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே வசித்து வருகிறார்கள். கட்டுமான தொழிலில் தொழிலாளியில் இருந்து, மத்திய அரசு பணியில் அதிகாரி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என ஏராளமானோர் இருக்கிறார்கள். நாங்கள் 3-வது தலைமுறையாக சென்னையில் வசித்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை எந்த பிரச்சனையும் நாங்கள் சந்தித்தது இல்லை. யாரும் பீகாரை சேர்ந்தவர்களை துன்புறுத்தி ஒடுக்கவும் இல்லை. தமிழக மக்கள் ஒருதாய் பிள்ளைகளாகவே எங்களை பாவித்து, சகோதரத்துவத்துடன் மிகவும் அன்பாக பழகுகிறார்கள்.

    அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க முன்னாள் தலைவர் எஸ்.ராமபிரபு:-

    பீகார் மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு வட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கட்டுமான வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் குழுவாக சேர்ந்துதான் வருவார்கள். அப்படி வருபவர்களுக்கு கட்டிடப் பணிகள் நடக்கும் இடங்களுக்கு அருகிலோ அல்லது தனியாக ஓரிடத்திலோ தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். தங்குவதற்கு மட்டும் ஏற்பாடு செய்வது இல்லை. உணவுக்கும் தேவையான வசதிகளை நேர்த்தியாக செய்து கொடுக்கிறோம். இதுவரை எந்த புகாரும் அவர்கள் தெரிவித்தது இல்லை. கட்டுமானப் பணிகளுக்காக வரும் இத்தகைய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சவுகரியமாகவே இருக்கிறார்கள்.

    திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் குஷ்புகுமாரி:-

    எனது கணவர் சந்தோஷ்குமார், கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக நான் திருப்பூர் காட்டுவளவு பகுதியில் சொந்தமாக டீக்கடை வைத்துள்ளேன்.

    எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை செல்கிறது. நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் எங்களிடம் அன்பாக பழகுகின்றனர். பக்கத்து வீட்டில் உள்ள பெண்களும் அக்காள், தங்கை, அம்மா போன்று பழகி வருகின்றனர். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் வழியில்தான் படிக்கிறார்கள். சொந்த மாநிலத்தை விட இங்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறோம்.

    திருச்சியில் வேலை பார்க்கும் பீகாரை சேர்ந்த கட்டிட தொழிலாளி அகிலேஷ்:-

    பீகாரில் வேலைவாய்ப்பு அதிகமாக கிடையாது. சாதிய பிரச்சனைகளும், ரவுடியிசமும் அங்கு நிறைய உண்டு. அங்கே ஏதாவது வேலை பார்த்தாலும் வருமானம் மிகவும் குறைவு. ஆனால் தமிழ்நாட்டில் அதுபோன்ற எந்த பிரச்சனையையும் நான் கண்டதில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கிறது. உணவு, தங்குமிடம் என அனைத்தும் செய்து கொடுக்கிறார்கள். இங்கு மனநிறைவான வேலை. கைநிறைய சம்பளம் கிடைக்கிறது. எங்களுக்கு அதுவே போதும்.

    மதுரையில் சாலையோரம் ஹெல்மெட் விற்கும் பகராஸ் என்ற வாலிபர் கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளது. எங்களுக்கு பிரச்சனை என்றால் சக வியாபாரிகள் ஆதரவாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார்கள். அனைவரும் எங்களுடன் உறவினர் போல் பழகி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் கோபால் குமார் சிங் கூறியதாவது:-

    நான் ராஜபாளையம் பகுதியில் உள்ள உணவகத்தில் 2 ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். இங்கு எந்த பயமும் இல்லாமல் வேலை பார்த்து வருகிறேன். வேலை பார்க்கும் இடத்திலும் எந்த இடையூறும் கிடையாது. எனது உடன் பணி புரியும் தமிழக தொழிலாளர்கள் என்னை சகோதரரை போல் நடத்துகின்றனர். பீகாரைவிட ராஜபாளையத்தில் வேலை செய்து வருவதை மகிழ்ச்சியாக உணருகிறேன்.

    நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த தினேஷ்:-

    நாங்கள் சிலர் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டத்திற்கு வந்து இங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு இங்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் பணியாற்றும் நிறுவனம் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. நாங்கள் நலமாக உள்ளோம்.

    நெல்லையில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் வித்யாசாகர்:-

    நாங்கள் கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்ப்பேட்டையில் நடந்து வரும் கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு இங்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் ஊரைச் சேர்ந்த பலர் எங்களுக்கு முன்பாகவே பல மாதங்களுக்கு முன்பு இருந்தே இங்கு வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.

    இவ்வாறு தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் தொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • கடந்த மாதம் ரூ.1,754.50-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.

    அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 4 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,754.50-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது. 

    • அதிமுகவில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரை 14 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
    • முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

    பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து ஒன்றாக பங்கேற்று, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

    ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அங்கு சசிகலாவையும் சந்தித்தனர்.

    இதற்கிடையே, செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டதற்கு, அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்கா விட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    அதிமுகவில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரை 14 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவில், சசிகலா முதல் செங்கோட்டையன் வரை பல்வேறு காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அந்த வகையில், கடந்த 2017ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்த சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நீக்கம் செய்யப்பட்டனர். இருவரும் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்கிற தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

    கே.சி.பழனிசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, ஓ.பி.ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அன்வர் ராஜா, மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், இன்று அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×