search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் அருகே பரபரப்பு   இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவத்தில் கணவன் கைது
    X

    மறியலில் ஈடுபட்ட புஷ்பவதியின் உறவினர்கள். இறந்த புஷ்பவதி.

    அரூர் அருகே பரபரப்பு இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவத்தில் கணவன் கைது

    • தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
    • அரூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள எல்லபுடையாம்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுனர் கோபி (வயது 27). இவருக்கு ஆட்டியானூர் கிராமத்தை சேர்ந்த புஷ்பவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு ஒரு வயதில் இரண்டு பெண் குழந்தை உள்ள நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபோல் ஏற்பட்ட தகராறில் கோபி தனது மனைவி புஷ்பவதியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் புஷ்பவதி தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து போன புஷ்பவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் கோபியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் பெனாசிர் பாத்திமா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    இந்நிலையில் புஷ்பவதி இறந்தது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என்றும் புஷ்பவதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரது உறவினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் மற்றும் அரூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×