search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருளர் சமுதாய மக்களுக்கு வீடு கட்டுவதற்கான பூமி பூஜை
    X

    வீடு கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டு பணிகளை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். 

    இருளர் சமுதாய மக்களுக்கு வீடு கட்டுவதற்கான பூமி பூஜை

    • சாலை, குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் செந்தமிழ்நகர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்கு கிடைக்கும் படி செய்கிறார். வாராந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களால் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இது தவிர செந்தமிழ்நகர் என்ற திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். பல ஆண்டுகளாக இருக்க வீடு இன்றி புறம்போக்கு நிலத்தில் இருக்கும் விளிம்பு நிலை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுத்து அதில் வீடு உள்ளிட்ட வசதிகளை அரசு சார்பில் செய்து கொடுத்து வருகிறார்.

    இந்த திட்டத்தில் வீடு கட்டிக்கொடுப்பதுடன் சாலை, குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை அருகே 30 ஆண்டுகளாக இருளில் தவித்த கிராம மக்களுக்கு பட்டா வழங்கி விளக்கு வசதி செய்து கொடுத்தார்.

    தற்போது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மருதாநல்லூர் ஊராட்சியில் இருளர் சமுதாய மக்கள் நீர்நிலை பகுதியில் வசித்து வந்தனர். அவர்களுடைய இருப்பிடம் தேடிச்சென்று சாதிச்சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். அப்போது அவர்கள் பட்டா, வீடு கோரிக்கையை வைத்தனர்.

    இதையடுத்து விளிம்புநிலை மக்களான இருளர் சமுதாயத்தை சேர்ந்த 61 குடும்பங்கள் நீர்நிலை புறம்போக்கில் வசித்து வந்தது தெரிய வந்தது. ஆனால் நீர்நிலை புறம்போக்கில் அவர்களுக்கு பட்டா வழங்க முடியாது என்பதால் அரசின் முயற்சியோடு தனியார் இடத்தை விலைக்கு வாங்கி அதில் வீடு கட்ட முடிவு செய்யப்பட்டது. கலெக்டரிடன் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிகிறது.

    இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் செந்தமிழ்நகர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி 9 இடங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை ஒன்றியம் புதுக்குடி அருகே வீடு கட்டப்பட்டு வருகிறது. தற்போது 2-வது கட்டமாக கும்பகோணம் ஒன்றியத்தில் இருளர் சமுதாய மக்களுக்கு, தனியாரிடமிருந்து இடம் அரசு சார்பில் விலை விலைக்கு வாங்கி தரமான கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்பட உள்ளது. இதற்காக பூமி பூைஜ போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×